Breaking news

சாவகச்சேரியில் திருடனை பொது மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.(வீடியோ )

  இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார். திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்ட வீட்டிலிருந்தவர் அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார். அதன்பின்னர் ...

மேலும்..

மெஸ்ஸியிற்கு அணிவித்த கறுத்த ஆடையின் உண்மை இரகசியம் கசிந்தது

மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்த அந்த அங்கியை அரபில் பிஷ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆடை போருக்கு செல்லும் அரபு வீரர்கள் வெற்றிக்கு பின் அணிவார்கள் (இந்த ஆடை ஓட்டகத்தின் முடி & ஆட்டுத் தோலினால் செய்யப்படுவது) . அதன் பொருட்டே மரியாதைக்குரிய ...

மேலும்..

மீண்டும் சடுதியாக குறைந்தது எரிபொருட்களின் விலை!!!..

இன்று இரவு 9 மணி முதல் பெட்ரோல் 92 விலை லீட்டருக்கு 40 ரூபாயும் ஆ ட்டோ டீசல் விலை லீட்டருக்கு 15 ரூபாயும் குறைகின்றது ஆகவே 92 ரக பெட்ரோலின் புதிய விலை 370 ரூபாய் ஆகவும் ஆட்டோ டீசலின் ...

மேலும்..

குருநாகல் பகுதியில் சிறுவன் உயிரிழப்பு!

கழிவு நீர் வாய்க்காலில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குருநாகல் பகுதியில் இன்று(05-09-2022) இடம்பெற்றுள்ளது.   குறித்த பகுதியில், கழிவு நீர் வாய்க்கால் அருகில் பாடசாலை பை ஒன்று இருப்பதனை கண்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த வாய்க்காலில் பாடசாலை சிறுவன் சிக்குண்டு இருப்பதனை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, குருநாகல் காவல்துறையினரும் ...

மேலும்..

தொடர்ந்தும் ஊரடங்கு நீடிப்பு!!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(10) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணி கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தனிமைப்படுத்தல் ...

மேலும்..

கேஸ் கிடைக்காமையால் அமைதியின்மை…

(க.கிஷாந்தன்) அட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று 19.08.2021 வியாழக்கிழமை லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர். எனினும் அனைத்து ...

மேலும்..

யாழ் அரியாலையை சேர்ந்த பெண் கொரோனா தொற்றால் மரணம்!

  யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரியாலை கனகரத்னம் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187ஆக உயர்வடைந்துள்ளது அறியமுடிகின்றது.

மேலும்..

4 வயது சிறுமியின் அசத்தல் சாதனை; ஆசியா சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவுசெய்தார்..!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த MLM.ஜெஸீம் U.K.பாத்திமா ஜவ்ஹறா தம்பதிகளின் செல்வ புதல்வி MJ.பாத்திமா அனத் ஜிதாஹ் Grandmaster மகுடத்தையும், ஆசிய நாடுகளின் கொடிகளை மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் "Fastest to Identify Flags of all ...

மேலும்..

இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாயம்!

இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாயம்! இந்தியாவை விட இலங்கையில் கொரோனா மரணங்கள் 15 மடங்கு அதிகமாக பதிவாகும் அபாய நிலைமையை நோக்கி நாடு நகர்வதாக ஸ்ரீலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது. நாட்டை முடக்குமாறு துறைசார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துவரும் பின்னணியில், இரவு நேர தனிமைப்படுத்தல் ...

மேலும்..

கிளிநொச்சியில் கிணற்றில் கிடந்த சடலம்!

  கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் பாயில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பராமரிப்பின்றிய கிணறு ஒன்றில் ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்ற குறித்த காணிக்கு காணி உரிமையாளர்கள் சென்றபோது , கிணற்றினுள் பாய் ...

மேலும்..

24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள் கம்பகாவில் அடையாளம்!

24 மணிநேரத்தில் 2000 தொற்றாளர்கள் கம்பகாவில் அடையாளம்! கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டத்தில், கடந்த 24 மணித்தியாலங்களில் 2,270 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் 15 சுகாதார பிரிவுகளில் தொம்பே சுகாதார பிரிவுகளிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொம்பே சுகாதார ...

மேலும்..

திருத்தலங்களுக்கு நிதிஉதவி வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

திருத்தலங்களுக்கு நிதிஉதவி வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்துள்ளார். இறுக்கமான சுகாதார ஏற்பாடுகளுடன் இன்று(15) குறித்த இரண்டு ஆலயங்களுக்கும் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காசோலைகளை ...

மேலும்..

நாட்டில் குவியும் சடலங்கள்! திணறும் அரசாங்கம்.

நாட்டில் குவியும் சடலங்கள்! திணறும் அரசாங்கம். ராகமை வைத்தியசாலையில் கடந்த 6 மாதங்களாக அடையாளம் காணப்படாத நிலைமையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்காமல் 48 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தமையே அண்மையில் அங்குள்ள பிரேத அறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட பிரதான காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். இவற்றில் 28 சடலங்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவற்றை வெகுவிரைவில் அடக்கம் அல்லது ...

மேலும்..

கோப்பாய் பகுதியில் கோரவிபத்து!

  யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக பெண்ணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது. மோட்டார் ...

மேலும்..

யாழ் கல்லுண்டாயில் கவுண்டது அரச பேருந்து!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் தனியார் பேருந்தினை முந்திச் செல்ல  முற்பட்டு கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர் சாலைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் -காரைநகர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தே இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் குடைசாய்ந்துள்ளது. தற்பொழுது கல்லுண்டாய் வீதி ...

மேலும்..